முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி

புதன்கிழமை, 10 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கையில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,500-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

வடகிழக்கு பருவ மழை அண்டை நாடான இலங்கையிலும் கொட்டித் தீர்த்து வருகிறது. லத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலே, திரிகோண மலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தன. கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,500-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலத்த சூறாவளிக் காற்று காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், இலங்கையை நோக்கி நகர்வதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து