முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங் சான் சூகி கட்சியினருக்கு 90 ஆண்டுகள் வரை சிறை

வியாழக்கிழமை, 11 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பாங்காக் மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த இரு தலைவா்களுக்கு ஊழல் வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் 90 மற்றும் 75 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதுகுறித்து அவா்களது வழக்கறிஞா் ஸாலயிங் கூறியதாவது: ஊழல் வழக்கில் கயின் மாகாண முன்னாள் திட்டமிடல் துறை அமைச்சா் தான் நயிங்குக்கு மாகாண நீதிமன்றம் 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மாகாணத்தின் முன்னாள் பெண் முதல்வா் நான் கீன்ட்வே மியின்டுக்கு இந்த வழக்கில் 75 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

ஏற்கெனவே, தேசத் துரோக குற்றச்சாட்டில் ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து