எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதலீட்டை அதிகரிப்பதற்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்த அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
நாட்டின் தொழில் முதலீடு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் 15-11-2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் கலந்து கொண்டார்.
அப்போது கொரோனா பெருந்தொற்றின் சவாலை எதிர்கொண்ட போதிலும், வருவாய் வரவுகளை ஈட்டுவதிலும் தொழில் முதலீட்டிலும் தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதைக் குறிப்பிட்டார். தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற இரண்டு தொழில் முதலீட்டுக் கூட்டங்களில் 21,021 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் ஒரு லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான அனுமதிகளை ஒருங்கே பெறுவதற்கான தேசிய ஒற்றைச் சாளர இணையவழி அமைப்பினை பாராட்டிய அமைச்சர், அனுமதிக்குப் பிந்தைய சேவைகளுக்காகவும் குறைதீர்ப்பு செயல்முறைக்காகவும் இந்த இணையதளத்தில் வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைத்தார். சில மத்திய சட்டங்களின் கீழ் அனுமதிக்கான காலவரம்பினை தற்போதைய நான்கு மாதங்களிலிருந்து ஒரு மாத காலஅளவிற்கு குறைக்கப்பட வேண்டுமெனவும் மருத்துவ சாதனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி விரைவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களை விரிவுபடுத்துவதில் உள்ள இடையூறுகளுக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசின் ஒத்துழைப்பை அமைச்சர் கோரினார். மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்திய விமானப் நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், அப்பகுதியில் கூடுதல் வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மதுரை விமான நிலையத்தினை விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
நாட்டின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சிறந்த சரக்கு பரிமாற்ற முனையமாக அமைவதற்கேற்ற திறனை பெருமளவில் கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். புறத் துறைமுக திட்டத்துடன் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்குவதற்கான பெருந்திட்டம் ஒன்றினை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு விரிவான தொகுப்பினை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார். தொழிற்சாலைகளுக்கான தளவாடச் செலவினைக் குறைக்கும் வகையில் சென்னை - கன்னியாகுமரி சாலை முழுவதையும் எட்டு வழிச்சாலையாக மேம்படுத்தவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிலுவையில் உள்ள 11 நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் மின் பகிர்மானக் கழகங்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்த அமைச்சர், போதுமான அளவில் தொடர்ந்து நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும், ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியினை கொண்டு வருவதற்கான வழிவகைகைளை மேம்படுத்த உதவுமாறும் அவர் ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டார். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறனை எடுத்துரைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கு மேலும், ஊக்கமளிக்கும் வகையில், கடலில் காற்றாலை மின் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கை ஒன்றினை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி மாநிலங்கள் கடன் பெறுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்றும், கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் திறனை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய வரம்புகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், வெளிநாட்டு நிதியுதவி வழங்கும் அமைப்பு ஒன்றிடமிருந்து ஒரு மாநிலத்திற்கு ஆண்டுக்கு ஒரு திட்டம் என்ற கட்டுப்பாட்டினை நீக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்நடவடிக்கைகள் முதலீட்டினை ஈர்க்கும் முதன்மை மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்திற்கு பயனளிக்கும் விதமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தரவினை அடிப்படையாகக் கொண்ட நிருவாகத்திற்கான முயற்சியினை ஆதரிக்கும் விதமாக வருமான வரி, ஆதார், கொரோனா பெருந்தொற்று போன்ற தகவல் தொகுப்புகளை மாநிலங்கள் அணுகுவதற்கேற்ப, தரவுப் பகிர்வு நெறிமுறையை உருவாக்குமாறு மத்திய அரசிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்திருப்பது, தேவை மற்றும் வழங்குதலின் நெகிழ்தன்மையை ஒட்டி பொருட்களின் மீதான விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பொதுவான மாற்றத்தினை ஆய்வு செய்வதற்கான பொன்னான வாய்ப்பினை வழங்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். அமைச்சர் தனது நிறைவு உரையில் பணிகளை ஒன்றிய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படும் என்பதை உறுதிப்படுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
பிரபல திரைப்பட இயக்குனர் 'பசி' துரை காலமானார்
22 Apr 2024சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் துரை நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கேரளாவில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை
22 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nb
-
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி: தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இன்று இறங்குகிறார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்
22 Apr 2024மதுரை : மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில்.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.