முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பில் தகவல்

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் பா.ஜ.க ஆட்சியை கைபற்றும் என கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற அளவில் தொகுதிகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க 312 இடங்களில் வென்று சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், 2022-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெறப்போகும் இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் போல்ஸ்ட்ரட் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளன். 

 

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க மீண்டும்  ஆட்சியை தொடர பெரும்பாலான மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2017 -தேர்தலில் பா.ஜ.க 312 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் கடந்தமுறை 47 இடங்களில் வென்றிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த முறை 119 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 32 இடங்களும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து