முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை 141 அடியை எட்டியது: கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ள நிலையில், விநாடிக்கு 772 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கனமழை கொட்டிக் தீர்த்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 141 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப் பெரியாறு, சப்பாத்து, உப்புத்தர உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 'ரூல் கர்வ்' முறை அமலில் உள்ளதால் அணையின் நீர்மட்டத்தை 141 அடியாக நிலை நிறுத்துவதற்காக 2 மதகுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 772 கன அடி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து கேரளாவிற்கு உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து விநாடிக்கு 3,348 கன அடியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து