முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. 

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 16 மாவட்டங்களுக்கும் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதேபோல்,கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  இதனால், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து