முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். 

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை சூடுபிடித்துள்ளது.மேலும் இன்று அரசு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது. 

இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்றக் கோரியும் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரியும் ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து