முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக கன்னியாக்குமரி செல்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகர்கோவில் : 2 நாள் பயணமாக  இன்று கன்னியாக்குமரி செல்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ஆர்.என்.ரவி முதல் முறையாக கன்னியாகுமரிக்கு இன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று (புதன்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வர உள்ளார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் பகவதி அம்மன் கோவில், ராமாயண சித்திரகூடம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

இதனை தொடர்ந்து நாளை (25-ம் தேதி) மாலை அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ஆர்.என்.ரவி முதல் முறையாக கன்னியாகுமரிக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு பணி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து