முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூல் விலை உயர்வை எதிர்த்து முழு அடைப்பு: திருப்பூரில் ரூ.200 கோடிக்கு மேலான வர்த்தகம் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருப்பூர் : நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் நேற்று முழு அடைப்புப் போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் ரூ.200 கோடிக்கும் மேலான வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாகப் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பின்னலாடைத் தொழில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்குப் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நேற்றைய தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டம் அறிவித்து இருந்தன.

இதன் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அதுசார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ரூ.200 கோடிக்கு மேல் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து