முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி புகழ் நிலைத்து நிற்க வேண்டும்: சசிகலா

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்தவும் கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர் ஜானகி என சசிகலா கூறியுள்ளார்.

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகியின் 98-வது பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜானகி அம்மையார், அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்தவும் கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர் ஜானகி. இந்த காலகட்டங்களில், அவரோடு பழகிய அந்த இனிமையான நாட்களை நினைத்து பார்க்கும்போது இன்றும் என் மனதில் பசுமையாக தோன்றுகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தையும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். காதுகேளாத மற்றும் வாய்ப்பேச முடியாததோருக்கான இல்லம், பள்ளியை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தார்.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிவந்த தொண்டர்கள் சார்பாகவும், ஜானகி அம்மையாரின் 98-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் சசிகலா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து