எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்ற இதுவாகும். ஆட்டநாயகனாக மயங்க் அகர்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
540 ரன்கள் இலக்கு...
நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய 43 நிமிடங்களில் நியூஸிலாந்து அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 540 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 56.3 ஓவர்களில் 167 ரன்களில் ஆட்டமிழந்து 372 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
4 விக்கெட்டுகள்...
ரவிச்சந்திரன் அஸ்வின் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 42 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2002-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸி. ஜாம்பவான் ஷேன் வார்ன் 24 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்குப் பின் சிறந்த பந்துவீச்சு அஸ்வினுடையதாகும்.
300-வது விக்கெட்...
அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் அஸ்வின் தனது 300-வது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கான்பூர் டெஸ்ட்டிலே இந்திய அணி வெற்றி பெற வேண்டியது. ஆனால், கடைசியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெற்றியை நழுவவிட்டது. அந்தத் தவறை இதில் செய்யாமல் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
அஜாஸ் சாதனை...
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேலின் சாதனை பொறிக்கப்பட வேண்டியது. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராகவே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரின் சாதனை மிக முக்கியமான ஒன்று. கிரிக்கெட் உலகிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே, லேக்கருக்கு அடுத்தாற்போல், படேலும் இணைந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் 21 ஆண்டுகளாக இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம் வைத்திருந்த சாதனையையும் படேல் முறியடித்துவிட்டார்.
36 விக்கெட்டுகள்...
இந்த டெஸ்ட் போட்டி முழுவதுமே இரு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்களைவிட சுழற்பந்துவீச்சாளர்களின் கையே ஓங்கியிருந்தது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளிலும் சேர்த்து 36 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதில் 33 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
140 ரன்களுடன்...
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 540 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்திருந்தது. நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
டக் அவுட்டில்...
ஆடுகளம் காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருந்ததால், அஸ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் பந்து நன்றாக எழும்பி, சுழன்றது. இதனால் தொடக்கத்திலேயே இருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆட நியூஸிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர். ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் 18 ரன்னில் ரவிந்திரா, புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜெயந்த் யாதவ் வீசிய 54-வது ஓவரின் 2-வது பந்தில் ஜேமிஸன் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் சவுதி கால்காப்பில் வாங்கி டக் அவுட்டில் வெளியேறினர்.
அஸ்வின் - ஜெயந்த் ...
அடுத்துவந்த சோமர்வில்லே ஒரு ரன்னில் யாதவ் பந்துவீச்சிலும், நிகோலஸ் 44 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்கள். 162 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 5 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. 2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி சாதனை
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மேலும், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
அதேபோல் இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கும் செலுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக பொறுப்பேற்று 66 போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார். இதில் 39 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
கோலி புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்றதில்லை. மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று 50-வது வெற்றியில் பங்களித்துள்ளார் விராட் கோலி.
இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டுகள்: ஆட்டங்கள் - 97, வெற்றிகள் - 50, ஒருநாள்: ஆட்டங்கள் - 254, வெற்றிகள் - 153, டி20: ஆட்டங்கள் - 95, வெற்றிகள் - 59.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.