முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஓராண்டாக மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை வாபஸ் பெற விவசாயிகள் முடிவு : கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் கைவிடுவதாக அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஓராண்டாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருந்தது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் கண்டிப்புடன் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தியபோது, வன்முறை வெடித்தது. என்றாலும் தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.

இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த 29-ம் தேதி பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. என்றாலும், குறைந்த பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) குறித்து உறுதியளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் எனத் தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கங்களுடன் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளது. டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் நாளை அவரவர் ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காசிப்பூர், சிங்கு, டிக்ரி ஆகிய பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தைத் தொடர தேவையில்லை என விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. டெல்லியில் நேற்று நடந்த விவசாய சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ''கோரிக்கை அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறோம்'' என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், சனிக்கிழமை சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் காலை 9 மணிக்கு வெற்றி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநில விவசாயிகள் 13-ந்தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து