முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை: இதுவரை 7 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ரியோ டி ஜெனீரோ : பிரேசிலில் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாகியா மாகாணத்தில் பலத்த கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்தனர். மேலும் மீட்புப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து