முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி

செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு உறுதியாகி இருக்கிறது. 

கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்று பல நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தடம் பதிக்க தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றுக்கு காரணமாக கூறப்படும் சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

வடக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரை சேர்ந்த ஒருவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து அவர் திரும்பியதாகவும், பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி இடத்தில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து துறைமுக நகரான தியான்ஜினில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து