முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமார் 310 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல்: இலங்கையில் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 15 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

சுமார் 310 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல்  இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இலங்கையின் மாணிக்க நகரம் என்றும் அழைக்கப்படும் இரத்தினபுரியில்  மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த அரிய ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. இது இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அரசு நடத்தும் தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் மிகவும் மதிப்புமிக்க விலைமதிப்பற்ற இந்த நீல ரத்தினத்திற்கு  சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதி அளித்துள்ளது.

இரத்தினக்கல்லில் இன்னும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

இதற்குள் இன்னும் சுத்தமான கற்கள் இருக்கக்கூடும், ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு சுத்தமான கற்களை  வெளியில் இருந்து பார்க்க முடிகிறது. அதனால் இந்த இரத்தினக்கல்லில் இன்னும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து