முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலகக் கோரி பாராளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்றதும், வன்முறையை ஏற்படுத்தியதும் திட்டமிடப்பட்ட சதி என்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், பாராளுமன்ற இரு அவைகளிலும் நேற்று காலை கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவை பதவி விலகக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகலில் அவைக் கூடியவுடன் எதிர்க்கட்சியினர் அமளியை தொடர்ந்ததால் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து