முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் வாரணாசியில் நடைபெறும் மேயர்கள் மாநாட்டை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவக்கி வைக்கவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் உள்ள மேயர்கள் கலந்து கொள்ளும் மாநாடு வாராணசியில் டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெறவுள்ளது. மத்திய நகர்புற வளர்ச்சித் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு ‘புதிய நகர்புற இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை டெல்லியிலிருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து, டிசம்பர் 17 வரை மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளின் சாதனைகள் குறித்த கண்காட்சியின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து