முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் காற்றில் தூக்கி வீசப்பட்ட பலூன் வீடு: ஆஸ்திரேலியாவில் 5 குழந்தைகள் பலி

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பலூன் வீடு அமைப்பு காற்றில் தூக்கி வீசப்பட்டதில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா மாகாணம் டெவன்போர்ட் பகுதியில் ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி ஆண்டு இறுதி நாளை கொண்டாடும் விதமாக இந்த விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்காக பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. முற்றிலும் காற்று நிரப்பப்பட்டு வீடு போன்ற அமைப்பில் குழந்தைகள் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதே போல், தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், விளையாட்டு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை (அந்நாட்டு நேரப்படி) 10 மணிக்கு நடைபெற்றது. குழந்தைகள் ஆரவாரத்துடன் விளையாடினர். அப்போது, அந்த பலூன் வீடு அமைப்பின் குழந்தைகள் ஏறி விளையாடினர்.  அப்போது, திடீரென வேகமாக காற்று வீசியது. இதனால், அந்த பலூன் வீடு அமைப்பு தரைமட்டத்தில் இருந்து மேலே எழும்பி காற்றில் பறந்தது. இதனால், அந்த பலூன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தரையில் இருந்து மேலே வானில் பறந்தனர்.

அதீத காற்று வீசியதால் 10 மீட்டர் (32 அடி) உயர்த்திற்கு சென்ற பலூன் வீடு காற்றின் வேகம் குறைந்ததால் அந்த உயரத்தில் இருந்து கிழே விழுந்தது. பள்ளிக்கு அருகே இருந்த மரத்தின் மீது அந்த பலூன் வீடு விழுந்தது. இதில், பலூன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகள் 9 பேர் தூக்கி வீசப்பட்டனர். 10 மீட்டர் உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் அருகில் இருந்த மரத்திலும், தரையிலும் வேகமாக விழுந்தனர்.  பலூனில் இருந்து தூக்கிவீசப்பட்ட இந்த கோர விபத்தில் 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 4 குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து