முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 112 ஆக உயர்வு

சனிக்கிழமை, 18 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கான மொத்த எண்ணிக்கை 112 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதும், ஊரடங்கு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியது.  எனினும், முதல் அலையை விட நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட 2வது அலையில், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக உச்சம் தொட்டது.  அதன்பின்னர் டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் இந்தியாவில் பெரும் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை. 

இந்நிலையில், கொரோனாவின் ஒமைக்ரான் வகை பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை, 112 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவற்றில் மராட்டியம் 40, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா 8, தெலுங்கானா 8, குஜராத் 5, தமிழகம் 1, ஆந்திர பிரதேசம் 1, சண்டிகார் 1, மேற்கு வங்காளம் 1 என ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து