முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி நிக்கோபார் தீவுகள் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

போர்ட்பிளேயர் : இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் இலக்கை எட்டி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாதனை படைத்துள்ளது. 

கோவிஷீல்டை மட்டுமே செலுத்தி 100 சதவிகிதம் இலக்கை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேம் என்ற பெருமையை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் படைத்துள்ளது. இதுகுறித்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், 

கோவிஷீல்டை மட்டும் பயன்படுத்தி 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய முதல் மாநிலம்/யூனியன் பிரதேசம் என்ற பெருமையை பெற்றுள்ளோம். உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாக உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார், அசாதாரண சாதனைக்காக கடக்க முடியாத முரண்பாடுகளை முறியடித்துள்ளது என பதிவிடப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் மற்றொரு டுவிட்டர் பதிவில், வடக்கிலிருந்து தெற்கே 800 கிமீ தொலைவில் 836 தீவுகளில் பரந்து விரிந்து பரந்த கடல், மிகவும் அடர்ந்த காடு, மலைகள் மற்றும் சீரற்ற காலநிலை ஆகியவற்றால் பிரிக்கப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தடுப்பூசி போடுவது மிகவும் சவாலானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து