முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி நானாவதி மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மாரடைப்பால் குஜராத்தில் உயிரிழந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை நீதிபதியாக இருந்தவர் கிரிஷ் தகோர்லால் நானாவதி. இவர் இதய செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் குஜராத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 86.

1935-ம் ஆண்டு பிறந்த நானாவதி, 1958-ல் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக தனது பணியை தொடங்கினார். 1979-ல் குஜராத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மற்றும் கர்நாடகா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார். 

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த இவர், 2014-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து விசாரிக்க தேசிய  ஜனநாயக கூட்டணி அரசு அமைத்த விசாரணை கமிஷனுக்கும் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து