முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்ப்பகிரஹத்திற்குள் அத்து மீறி நுழைய முயன்றதாக பஞ்சாப் மாநிலம் பொற்கோயிலில் மர்ம நபர் அடித்துக்கொலை : சீக்கிய கொடியை அவமதிக்க முயன்ற மற்றொருவரும் கொல்லப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அமிர்தசரஸ் : சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் கர்ப்பகிரஹத்திற்குள் நுழைந்து புனித நூலையும், வாளையும் கைப்பற்ற முயன்றதாக மர்ம நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று சீக்கிய மதக்கொடியை அவமதிக்க முயற்சித்ததாக  நிஜாம்பூர் கிராம மக்கள் ஒருவரை பிடித்து அடித்து கொன்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில். இங்கு புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் புனித வாள் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரார்த்தனை வேளையின் போது, மர்ம நபர் ஒருவர் பொற்கோயிலின் கர்ப்பகிரஹமாகக்க் கருதப்படும் புனித நூலும், வாளும் உள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் புனித வாளையும் கைப்பற்ற முயன்றதாகவும் தெரிகிறது. அவரைத் தடுத்து நிறுத்திய அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

அங்கே, தலைமைப் பூஜாரி மாலை பிரார்த்தனையை உச்சரித்துக் கொண்டிருக்க ஒரு நபர் புனித நூலை எடுக்க முயற்சிக்க, அருகில் இருக்கும் துணை சாஹிப் அந்த நபரைப் பாய்ந்து தடுக்கிறார். ஆனால் தலைமைப் பூஜாரியோ எந்த சலனமும் இல்லாமல் பிரர்த்தனையைத் தொடர்கிறார். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொற்கோயிலுக்குள் அத்துமீறிய அந்த நபர் மக்கள் தாக்கியதில் உயிரிழந்தார். சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். அவர் எங்கிருந்து வந்தார்? எப்படி கோயிலுக்குள் நுழைந்தார்? போன்ற தகவல்களைத் திரட்டி வருகிறோம். அத்துமீறிய அந்த நபருக்கு 20 முதல் 25 வயது இருக்கும். அவர் தலையில் மஞ்சள் துணியைக் கட்டியிருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொற்கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அவரின் அடையாளம் விரைவில் கண்டறியப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் காவல் துறை துணை ஆணையர் பரமீந்தர் சிங் பந்தால் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த  சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று சீக்கிய மதக்கொடியை அவமதிக்க முயற்சித்ததாக  நிஜாம்பூர் கிராம மக்கள் ஒருவரை பிடித்து கடுமையாக தாக்க துவங்கினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, அந்த நபரை தங்களது   கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது, போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், அந்த நபரை உள்ளூர் மக்கள் அடித்து கொன்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பொற்கோயில் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து