முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய மல்லையா, நீரவ், மெகுல் சோக்ஸியிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் மீட்பு : மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிஓடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸியிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 109.17 கோடி மதிப்புள்ள கடன் மீட்கப்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

மக்களவையில் 2-வது பிரிவு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் அரசின் செலவுக்காக கூடுதல் நிதிக் கோரி மானியக் கோரிக்கைத் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் தொகையைவிட கூடுதலாக ரூ.3.73 லட்சம் செலவுக்கான மானியக் கோரிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது., நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் தொகையைவிட கூடுதலாக ரூ.3.73 லட்சம் கோடி செலவிடுவதற்கு அனுமதி கோரப்படுகிறது. இதன்படி ஏர் இந்தியா விமானத்தின் கடன்தொகைக்காக ரூ.62 ஆயிரம் கோடியும், உரங்கள் வழங்க மானியமாக ரூ.58,430 கோடியும், ஏற்றுமதி ஊக்கச்சலுகையாக ரூ.53,123 கோடியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக ரூ22,039 கோடி நிதியும் தேவைப்படுகிறது. இந்த கூடுதல் செலவினத்துக்காக இந்த நிதி கோரப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

வங்கிகளின் கடன் வசூலிப்புக் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ அமலக்கப்பிரிவு தகவலின்படி வங்கியில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரின் சொத்துக்களை விற்பனை செய்து இதுவரை ரூ.13ஆயிரத்து 109.17 கோடிக் கடனை வங்கிகள் மீட்டுள்ளன. கடைசியாக கடந்தஜூலை மாதம் 16ம் தேதிவிஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.792 கோடி சொத்து விற்பனை செய்யப்பட்டு மீட்கப்பட்டது

பொத்துதுறை வங்கிகளும் கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.5.49 லட்சம் கோடி கடனை திரும்ப வசூலித்துள்ளன. கடனைச் செலுத்தமுடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு அந்தப் பணம் வங்கிக்கு செலுத்தப்பட்டு, வங்கி இன்று பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல வங்கியில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாாரமன் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து