முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 6,317 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 78 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.  இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும், பிரிட்டன் 4வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பட்டியலில்  6,317 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.  

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில்  318 ஆக இருந்தது. 6,906 பேர் குணமடைந்தனர். 78 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 575 நாட்களுக்கு பின் குறைவான அளவு என கணக்கிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் 213 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

டெல்டாவை விட ஒமைக்ரான் பரவல் தீவிரத்தன்மை கொண்டது என்பதால்  கொரோனா 3 வது அலையை தடுக்க மாவட்ட அளவில்  தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு  மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இரவு ஊரடங்கு, 24 மணிநேர உதவி மையம் உள்பட துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து