முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 38 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

வங்கதேசத்தில் பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 

தலைநகர் டாக்காவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் ஓபிஜான் 10 என்கிற 3 அடுக்குகளை கொண்ட படகு 500 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று படகில் ஏற்பட்ட தீயால் அதில் பயணித்த 38 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில், மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் தீயில் இருந்து தப்பித்து ஆற்றில் குதித்ததாகவும் இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். படகின் எஞ்சினில் இருந்து தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி காவல்துறை தலைமை அதிகாரி மொய்னுல் கூறுகையில்,

தற்போது வரை 38 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் தீயினால் இறந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து