முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிடோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓம் பிர்லா, பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- 

வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றியுள்ள செழுமையான சேவைகளால் நாம் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்தியாவை வலுவாக்கவும், வளர்ச்சியடைய வைக்கவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வளர்ச்சி முன்னெடுப்புகள் லட்சக்கணக்கான இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து