முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழுவினர் வருகை : நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை வழங்கும்

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழுவினர் வருகை தரவுள்ளனர். இந்த குழுவினர் எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வருகிற ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. கர்நாடகத்தில் முதலில் 2 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த 23 நாட்களில் நாட்டின் 17 மாநிலங்களுக்கு பரவி வேகம் காட்டி உள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இதன்படி மராட்டியத்தில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும், கேரளாவில் 37 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், ராஜஸ்தானில் 22 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும், ஆந்திராவில் 4 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், சண்டிகாரில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், உத்தரகாண்டில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மராட்டியம், தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மிசோரம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைகிறது. மாநிலத்தில் நிலவும் ஒமைக்ரான் பரவல் தன்மை குறித்து ஆய்வு நடத்தி, எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்த குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து