முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காள தேச படகு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு: கேப்டன் உட்பட 8 பேர் கைது

திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 400 பேருடன் 3 அடுக்குகளை கொண்ட பயணிகள் படகு பர்குனா மாவட்டம் நோக்கி புறப்பட்டது. 

ஜலாஹதி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஆற்றில் அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது படகில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் அறையில் ஏற்பட்ட தீ மளமளவென படகின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

அதிகாலை பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததால் இந்த தீ விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயில் இருந்து தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்ள பல பயணிகள் ஆற்றில் குதித்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 150 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவத்திற்கு படகின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே காரணம் என அதிகாரிகள் கூறினர். மேலும் அவர்கள் கூறுகையில், பயணிகளை ஏற்றிச்செல்லும் மூன்று மாடி கொண்ட படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளனர். மேலும் படகில் பாதுகாப்பு உபகரணங்களான மிதவைகள் இல்லை. தீயை அணைக்கும் கருவிகள் படகில் இல்லை என்று கூறினர். படகில் பயணம் செய்தவர்கள் கூறும்போது, அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. படகு உடனே நங்கூரமிடவில்லை. தீ விபத்தி ஏற்பட்ட பின்னர் சிறிது தூரம் சென்றது. மேலும் சிலர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர் என கூறினர். 

படகு தகுந்த பாதுகாப்பு சாதனங்களோடு இயக்காதது போன்ற பல காரணங்களால், படகின் கேப்டன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து