முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டு

புதன்கிழமை, 29 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவலால் மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டு நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு தொற்றின் விழுக்காடு அதிகரித்திருக்கிறது. தற்போது ஒரேநாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவின் மறு உருவம் என்று கூறப்படும் ஒமிக்ரான் தொற்றானது பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவில் மருத்துவமனைகளில்  குழந்தைகள் வார்டு நிரம்பி வழிகின்றன.

இது குறித்து நியூயார்க் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஒமைக்ரான் பாதிப்பால் குழந்தைகள் வார்டு நிரம்பி வழிகிறது. நியூயார்க் நகரில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்கு உட்பட்டோர் ஆவர். இவ்வாறு அந்த அறிக்கையில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையே அமெரிக்காவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து