முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவே: சவுமியா சுவாமிநாதன்

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது.  மேலும் கொரோனா தடுப்பூசியால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரான் மட்டுமின்றி பிற நோய்களையும் எதிர்க்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

மேலும் எதிர்பார்த்தபடி, ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக டி செல் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. இது கடுமையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். தடுப்பூசி போடாதவர்கள், தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள் என்றும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து