முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

தமிழகத்தில் புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்யத் தடையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மக்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 294 பேருக்குப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இன்று இரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை பால் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்யத் தடையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளத் தடையில்லை. ஆனால் உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டுகிறோம். 

அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு முறைகளான தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் கட்டயாம் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான  அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

டிச.31 இரவு 12 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி 12 மணி வரை புத்தாண்டு நாள் தான். ஆகையால் மக்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் கோயில்களில் குவிவதைத் தவிர்த்து ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு கோயில்களுக்குச் செல்ல வேண்டுகிறோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து