எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு இனிய ஆண்டாக அமையட்டும். கடந்த 2021-ல் நடந்த பல்வேறு நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.
ஜனவரி
2021 இல் புத்தாண்டிலேயே இந்தியாவுக்கு நல்ல ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு தேர்வானது. அதே போல கொரோனா தொற்றுக்கு கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்டுக்கு அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் கட்டமாக 1.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஆனால் அதற்கு பிறகுதான் நாட்டில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி போராடிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்தது. குடியரசு தினத்தன்று நடந்த இந்த வன்முறை சம்பவத்தில் செங்கோட்டையில் தேசிய கொடிக்கு அருகிலேயே தங்களது கொடி மற்றும் பேனர்களை விவசாயிகள் ஏற்றினர். 5 ஆம் தேதி எழுத்தாளர் ஆ. மாதவன் தனது 87-வது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், தமது 88வது வயதில் மூப்பு காரணமாக மறைந்தார்.
பிப்ரவரி
பிப்ரவரி 7 இல் உத்தரகாண்ட் பனிப்பாறை வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். அம்மாத 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியை தழுவியது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது. அதே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மார்ச்
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் விலகி கொள்ள, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.
ஏப்ரல்
இந்தாண்டுக்கான திரைப்படை துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் கொரோனா பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியிருந்தது. 6 ஆம் தேதி கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் பல கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற்றன. 7 ஆம் தேதி எதிர்பாராத திருப்பமாக மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சட்டீஸ்கரில் நடந்த மோதலில் 22 வீரர்கள், 9 மாவோயிஸ்ட்கள் பலியாகினர். 10 ஆம் தேதி மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 4 பேர் பலியாகினர். 12 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஓய்வு பெற்றார். இதையடுத்து சுசீல் சந்திரா தலைமை தேர்தல் ஆணையராக மறுநாள் பதவியேற்றுக் கொண்டார். 20 ஆம் தேதி கொரோனா 2 ஆம் அலை பரவலை தடுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதே நாளில் இந்திய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெற்றார். மறுதினம் புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்றார். 17 ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மரணமடைந்தார். அதே போல பிரபல இயக்குநர் கே வி ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பெரியாரிய - மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் தமது 96வது வயதில் காலமானார்.
மே
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2 ஆம் தேதி வெளியாகின. அதில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் 3 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியும், அசாமில் பாஜகவும், கேரளத்தில் இடதுசாரி கூட்டணி கட்சிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. தமிழகத்தில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையாக வென்றது. 9 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் முதல்வரானார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக மற்றும் ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வென்றது. ரங்கசாமி முதல்வரானார். அசாம் முதல்வராக ஹிமாந்த பிஸ்வாஸ் முதல்வரானார்.
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கியது. எனினும் மே மாதத்தின் தொடக்கத்தில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. 4 ஆம் தேதி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதுமை காரணமாக தமது 87வது வயதில் காலமானார். 30 ஆம் தேதி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவிகளில் ஒருவரான மைதிலி சிவராமன் தமது 81-வது வயதில் மறைந்தார்.
ஜூன்
18 ஆம் தேதி முன்னாள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் 91 ஆவது வயதில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சண்டிகரில் மறைந்தார்.
ஜூலை
4 ஆம் தேதி உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி புதிய முதல்வரானார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு தமிழகத்தை சேர்ந்த எல், முருகன் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றார். மறுநாள் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 24 ஆம் தேதி டோக்கியோ ஒலிம்பிக்கில் சைக்கோம் மீராபாய் சானு பளூ தூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்றார். 28 இல் பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக பதவியேற்றார். 7 ஆம் தேதி பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் திலிப் குமார் தமது 98-வது வயதில் மறைந்தார்.
ஆகஸ்ட்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பி வி சிந்து, லவ்லினா போர்கோஹெய்ன், வெண்கலம் வென்றனர். ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. பளு தூக்கும் போட்டியில் ரவி குமார் தாகியா வெள்ளி பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். பஜ்ரங் புனியா பளூ தூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றார். 22 ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார். .
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பவினா படேல் டேபிள் டென்னிஸில் வெள்ளி, நிசாத் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
அவனி கெலரா துப்பாக்கி சுடுதலில் தங்கம், யோகேஷ் குமார் துனியா வட்டு எறிதலில் வெள்ளி, தேவேந்திர ஜஜாரியா ஈட்டி எறிதலில் வெள்ளி, சுமித் ஆண்டில் தங்கமும் வென்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளியும், சரத் குமார் வெண்கலமும் வென்றனர். சிங் ராஜ் அதானே துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார்.
5 ஆம் தேதி அதிமுக அவைத்தலைவர் இ. மதுசூதனன் உடல்நலக் குறைவால் 81 ஆவது வயதில் சென்னையில் மறைந்தார். 13 ஆம் தேதி மதுரை ஆதினத்தின் 292-வது மடாதியாக இருந்த அருணகிரிநாதர் முக்தி அடைந்தார். 23 ஆம் தேதி மதுரை ஆதின மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பொறுப்பேற்றார் 21 ஆம் தேதி உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான கல்யாண் சிங் தமது 89-வது அகவையில் மறைந்தார்.
செப்டம்பர்
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் அவனி லெகரா துப்பாக்கி சுடுதலில் வெண்கலம், பிரவீண் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றனர். அரவிந்தர் சிங் வில் வித்தையில் வெண்கலம், மணீஸ்நர்வால் துப்பாக்கி சுடுதலில் தங்கம், அதே பிரிவில் சிங்ராஜ் அதானே வெள்ளியும் வென்றனர். பிரமோத் பகத் இறகு பந்தாட்டத்தில் தங்கம், மற்றொரு பிரிவில் கிருஷ்ண நாகர் தங்கம் வென்றனர்.
குஜராத் புதிய முதல்வராக புபேந்திர படேல் பதவியேற்றார். ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக 18 ஆம் தேதி பதவியேற்றார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். 8 ஆம் தேதி தமிழ்த் திரைப்படக் கவிஞர் புலமைப்பித்தன் உ்டல்நலக் குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது 80-வது வயதில் காலமானார்.
அக்டோபர்
68 ஆண்டு களுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் டாடா நிறுவனம் கைப்பற்றியது. 21 ஆம் தேதி 100 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை எட்டப்பட்டது. தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. 30 ஆம் தேதி போப்பாண்டவரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். 8 ஆம் தேதி கவிஞர் பிறை சூடன், 12 ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மறைந்தனர். 28 ஆம் தேதி சிபிஎம் மூத்த தலைவர் நன்மாறன் தனது 74 ஆவது வயதில் காலமானார்.
நவம்பர்
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் ஆதி சங்கரர் சிலை திறந்து வைக்கப்பட்டது. டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களை ஸ்தம்பிக்க செய்த, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. 24 ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
டிசம்பர்
தேர்தல் திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தி மக்களவையில் சட்ட வரைவு அறிவிக்கப்பட்டது. தொல்காப்பியம் இந்தி மொழி பெயர்ப்பு, பதிணெண் கீழ் கணக்கு கன்னட மொழிபெயர்ப்பு ஆகியவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் புது டெல்லியில் வெளியிடப்பட்டது.
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தமிழகத்தில உள்ள உதகமண்டலத்தில் 8 ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த கோர ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 சக ராணுவ உயரதிகாரிகள் அதில் பலியாயினர். 10 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்தை விவசாயிகள் திரும்ப பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு