முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டின் முதல் நாளிலேயே தங்கம் விலை ரூ. 320 உயர்வு

சனிக்கிழமை, 1 ஜனவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் முதல் நாளிலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 4559- க்கு விற்பனையானது.  பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 36472-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 39400-க்கு விற்பனையானது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ. 66,70 ஆக இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து