முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டை முன்னிட்டு தமிழக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனிக்கிழமை, 1 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழகத்தில்  பொது இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனினும் முக்கிய தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பிட்ட சில கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு வழிபட்ட மக்கள் பின்னர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  

சென்னையில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  மெரினா கடற்கரையிலும், கடற்கரை சாலைகளிலும் மக்கள் அதிகம் கூடுவது வழக்கம் .  கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய சாலைகள்  புத்தாண்டை கொண்டாட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு நேரங்களில் புத்தாண்டை கொண்டாட மக்கள் சாலைகளில் வலம் வருவதை தடை செய்யும் பொருட்டு சென்னையில் இரவு முழூவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரவு 12 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து