முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ஆயுதங்களுடன் திரிந்த அண்ணன்-தம்பி கைது

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரையில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 2 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை  நகரில் வழிப்பறி கொள்ளையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

இதையடுத்து திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் மேற்பார்வையில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இரவில் மதுரை வ.உ.சி. பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 150 கிராம் கஞ்சா, வாள், கத்தி இருந்தது தெரியவந்தது.

போலீசார் மேற்கண்ட 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் எல்லீஸ் நகர் போடி லைனைச் சேர்ந்த சுந்தர் மகன் கவுதம் (22), அவரது சகோதரர் வல்லரசு (21) என்பது தெரியவந்தது. 

எஸ்.எஸ்.காலனி போலீசார் அண்ணன், தம்பி இருவ ரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து