முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு 10 மணிக்கு மேல் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் நடக்க தடை விதிப்பு

வியாழக்கிழமை, 6 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரனோ மூன்றாம் அலை மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் இன்று முதல் வெள்ளி சனி ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாநகரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர (கிழக்கு) துணை ஆணையர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பத்ரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இன்று (நேற்று) முதல் கொரனோ பரவல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதையொட்டி ஓட்டல்கள் திரையரங்குகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கொரனோ தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பொதுபக்கள் முன்னதாகவே தாங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் நேரத்தில் பாதயாத்திரை செல்வதை தவிர்த்து கொரனோ பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒருவாரமாகவே நெல்லை மாநகரில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை கண்காணித்து வருகிறோம் ஒரு வாரத்தில் விதியை மீறியோர் மீது 5000 வழக்குகள் போட்டுள்ளோம். இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித நகர்வும் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து