முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அதிகரிக்கும் தொற்று ஒரேநாளில் 7 ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு

வியாழக்கிழமை, 6 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் முந்தைய நாள் கொரோனா பாதிப்பை விட நேற்று 2,121 பேருக்கு தொற்று அதிகரித்து 6,983 ஆக பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 4,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்றைய பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,67,432 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,07,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 721 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 22,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து