முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஞாயிறு முழு ஊரடங்கு எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நாளை 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கானத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஒமைக்ரான் பரவலினால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜனவரி 9-ம் தேதி (நாளை) டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுகள் முற்பகல், பிற்பகல் என இரு தேர்வுகள் நடைபெறவிருந்தன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருந்தாலும் தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முழு ஊரடங்கு நாளில் தேர்வர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் உணவுக்கான வசதி இல்லாததால் தேர்வு வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுசீட்டினை பயன்படுத்தி தேர்வு எழுதிக் கொள்ளலாம். நுழைவுச்சீட்டில் உள்ள அதே தேர்வு மையத்தில் எழுதிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து