முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள பனையடிப்பட்டி ஊராட்சி, அல்லம்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த 5-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி, தொழிலாளர்கள் மஞ்சளோடைப்பட்டி முனியசாமி, கன்னகுடும்பன்பட்டி காசி, கொம்மங்கிபுரம் அய்யம்மாள், தென்காசி மாவட்டம், கிழவிகுளம், காமாட்சிபுரம் செந்தில் ஆகியோர் பலியானார்கள்.

விபத்து தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, தனது தாயார் பூமாரி பெயரில் ஆலைக்கான உரிமம் பெற்றிருப்பது தெரியவந்தது. விபத்து தொடர்பாக கருப்பசாமி, அவரது தாயார் பூமாரி, ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்பசாமி இறந்து விட்ட நிலையில் மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பூமாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து