முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை: மேலும் புதிய கட்டுப்பாடுகள் வருமா?

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜன.4-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்று 10 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. தமிழகம் முழுவதும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னையில் மட்டும் 5,098 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து