முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் திருநாளை முன்னிட்டு திட்டமிட்டப்படி இன்று முதல் 3 நாட்களுக்கு 16768 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு 16768 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த 20.12.2021 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போழுது அரசு அறிவுறுத்தியுள்ள கொரோ தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று 11/01/2022 முதல் 13/01/2022 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10.300 பேருந்துகளும். பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16768 பேருந்துகள் இயக்கப்படும். 

சென்னையிலிருந்து இன்று முதல் 13-ம் தேதி வரை மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளும், கே.கே. நகர் மாபோக பேருந்து நிலையத்தில் இருந்து இ.சி.ஆர். வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் அறிஞர் அண் பேருத்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி. பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து  திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் ஈழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவணம் வழியாக புதுச்சேரி, கடலூா் செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகளும்,  கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து  மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம். வேளாங்கண்ணி திருச்சி. மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம். கள்ளக்குறிச்சி. காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர். திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு) இயக்கப்படும். 

வழித்தட மாற்றம்:

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து. ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு. தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு வசதி:

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in. tnstc official app, www.redbus.n. www.paytm.com. மற்றும் www.businda.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வாதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் வசதிக்காக  கட்டுப்பாட்டு அறை. மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக. 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 8151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை  தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள எதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு பேருந்துகள்:

பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல எதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து