முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாக பெற நடவடிக்கை எடுங்கள்: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த, பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் போன்ற நிலையான செயல்பாட்டு முறைகளை அரசு நிர்வாகம் மேற்கொள்வதில்லை.   கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் நீண்ட காலதாமதமாகிறது என்றும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 39,637 தெருக்களில், 5,000க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். அரசு வெளியிடும் தினசரி தகவலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இப்பொழுது கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிற நிலையில், கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பரிசோதனை முடிவுகளை உடன் அறிவிக்க வேண்டுமென்றும், தேவைப்படுவோருக்கு தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு அதன் முடிவுகளை விரைந்து வழங்கவும், வழிவகை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து