தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பும்ராவை மறைமுகமாக சாடும் டேர்ல் ஸ்டெயின்
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவருவது டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசி வெறுப்பேற்றுவது தடுக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவி்த்துள்ளார். மறைமுகமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாள் ஜஸ்பிரித் பும்ராவை கட்டம்கட்டித்தான் டேல் ஸ்டெயின் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஒவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக இது உதவுமா. டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்கள் டாப்-கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டல்விடுக்கும் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சிரமம் அதிலிருந்து ப்ரீ ஹிட் காப்பாற்றும். இதுபற்றி ஸ்வரஸ்யமாக விவாதிக்கலாம். டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது. பும்ரா “நன்றாகப்பந்துவீசி” 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.
____________
ஜோகோவிச் விவகாரம் எதிரொலி: தாமதமான பட்டியல் வெளியீடு
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன் வருகிற திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதுவரை அவருக்கு விசா விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று யார் யாருடன் மோதுவது என்பதை முடிவு செய்யும் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஜோகோவிச் விளையாடுவா? விளையாடமாட்டாரா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் போட்டி வரைவு பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
______________
கோலி - புஜாராதான் தலைவலி: தெ.ஆப்பிரிக்க வீரர் பீட்டர்சன்
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 9 ரன்னுடனும், விராட் கோலி 14 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் செய்தி நிறுவனத்திடம் பேசிய கீகன் பீட்டர்சன் விராட் கோலியும் புஜாராவும் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தார். காலையில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஆனால் தற்போது களத்தில் உள்ள விராட் கோலி மற்றும் புஜாராவின் ஆட்டம் கடந்த சில போட்டிகளில் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டன என தெரிவித்தார்.
_____________
கேட்சில் சதமடித்தார் கேப்டன் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் பவுமாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் விராட் கோலி. இது அவரது 100-வது கேட்ச் சாதனை ஆகும். விராட் கோலி 99 டெஸ்டில் 168 இன்னிங்சில் 100 கேட்ச் பிடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 100 கேட்ச் பிடித்த 6-வது வீரர் விராட் கோலி ஆவார். ராகுல் டிராவிட் 163 டெஸ்டில் 299 இன்னிங்சில் (1996 முதல் 2012 வரை) 209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். வி.வி.எஸ். லட்சுமண் (135), தெண்டுல்கர் (115), கவாஸ்கர் (108), அசாருதீன் (105) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
___________
‘புஷ்பா’ படம் அல்லு அர்ஜூன் கெட்டப்பில் ரவீந்திர ஜடேஜா
தனது இன்ஸ்டாகிராமில் ரவீந்திர ஜடேஜா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் 17-ம் தேதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பைப்பெற்ற திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்'. தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியான இந்தப்படம் வசூல் சாதனைப் படைத்து வருகிறது. குறிப்பாக, அல்லு அர்ஜூனின் தாடி மீசையுடன் சற்று வித்தியாசமான கெட்டப் மற்றும் சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் நடனம் ஆகிய இரண்டும் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த கெட்டப் கொண்ட தத்ரூபமான புகைப்படத்தை, ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை பதிவிட்டு பின்குறிப்பாக, “நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை என்றைக்குமே ஆதரித்ததில்லை. இப்படத்தில் நான் புகைப்பிடிக்கும் பீடி கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களை உட்கொள்வது மற்றும் பிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ‘புஷ்பா’ பட வசனத்தை அல்லு அர்ஜூன் பாணியில் பேசும் வீடியோவை பகிர்ந்தநிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இந்தப்புகைப்படம், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் உத்தரவு அமலுக்கு வந்தது
23 May 2022சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-
குடிநீர் வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 May 2022சென்னை : குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இ
-
அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது
23 May 2022சென்னை : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.
-
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
23 May 2022எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
23 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
-
இந்தியாவில் 2,022 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
23 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய அணியில் மீண்டும் இடம்: நீங்கள் உங்களை நம்பினால் போதும் - தினேஷ் கார்த்திக்
23 May 2022நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்? இன்று முதல் பிளே-ஆப் சுற்று: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
23 May 2022ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
-
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்: சிறப்பு உரிமை குழு முன்பு ஆஜராகி பெண் எம்.பி நவ்நீத் ராணா விளக்கம்
23 May 2022புதுடெல்லி : சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.