முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதைப் போல இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் தமிழகம் முழுவதும் 600 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இல்லம் தேடி கூடுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகள் தோறும் மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறுகிறுது. சுமார் 50 ஆயிரம் இடங்களில் வாரம் தோறும் இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இனிமேல் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கென்று, சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கென்று சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிபெறுவார்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகான கொரோனா பாதிப்பு இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர் தெரியவரும். தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கிறோம்.

இதை தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார விதிகள் அடிப்படையில் தான் திரையரங்கு உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் மக்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என கூறியிருப்பதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து