முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூவம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கூவம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றுவது தொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த மழையின் போது மதுரவாயல் அருகே நொளம்பூரில் தரைப்பாலத்தின் மூலம் ஆற்றைக் கடக்க முயன்ற 3 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அங்குள்ள 2 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளை நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, இரு பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு, கூவம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து