தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவினை நல்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
முதன்முதலில் 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவினை 18-08-2005 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008ம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்பொழுதும் இந்தத் திட்டத்திற்கு கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து 27-03-2008 அன்று அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 26-03-2008 அன்று அறிவித்தார். இதன்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒகேனக்கல்லில் நடத்தப்பட்டது.
ஜெயலலிதா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பைத் தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரும் தீர்மானம் 27-03-2008 மற்றும் 01-04-2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், 05-04-2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தெரிவிக்காமலேயே "கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்" என்று கூறி அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தார் அப்போதைய முதலமைச்சர். இதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர் ஜெயலலிதா.
அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், அரசியல் உறுதி மிக்க அரசுதான் மக்களுக்குத் தேவை என்றும், அத்தகைய அரசை அதிமுக வழங்கும் என்றும் சட்டமன்றத்திற்கு வெளியே அறிவித்தவர் ஜெயலலிதா. இந்தத் திட்டம் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஜெயலலிதா 2011ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்திருந்தன. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முடுக்கிவிட்டதன் காரணமாக 1,928 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மூன்று ஆண்டுகளில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 82 விழுக்காடு பணிகளை முடித்து இந்தத் திட்டத்தை 29-05-2013 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தவர் ஜெயலலிதா. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட முழுக் காரணமானவர் ஜெயலலிதாவும், அ.தி.மு.க. ஆட்சியும்தான் என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவேரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரைக் கூட திறந்துவிட மறுப்பதையும், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கொத்தமல்லி சாதம்
1 day 12 hours ago |
எலுமிச்சை சாதம்
2 weeks 2 days ago |
கொத்தமல்லி சிக்கன்
1 month 1 week ago |
சிக்கன் மசாலா
2 months 1 day ago |
மதுரை மட்டன் கறி தோசை.
2 months 3 weeks ago |
சிக்கன் போன்லெஸ் 65.
2 months 4 weeks ago |
-
கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யப் படையினர் தீவிரம்
28 May 2022கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஐடியா
28 May 2022டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-05-2022.
28 May 2022 -
தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
28 May 2022தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்
-
விஷமக்காரன் விமர்சனம்
28 May 2022ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி என்கிற விஜய் குப்புசாமி.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை
28 May 2022ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் சில நாட்களுக்கு அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2022அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார் தொழிற்சாலை அமைக்கப்படுமா? எலான் மாஸ்க் பதில்
28 May 2022டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
28 May 2022முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்கு
-
குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
28 May 2022குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
28 May 2022சென்னை : பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்: ரணில் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
28 May 2022இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கும் ஒரே நாளில் வரும் பிறந்ததினம்
28 May 2022திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
28 May 2022தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சூடானில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை
28 May 2022பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.
-
பயணிகளை தடுத்த விவகாரம்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ
28 May 2022மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.
-
கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது: குஜராத்தில் பிரதமர் மோடி உரை
28 May 2022கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
28 May 2022வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடியவரை சுட்டுக் கொன்ற போலீசார்
28 May 2022கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுவீழ்த்தினர்.
-
மனைவி, குழந்தைகளை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலையா? - காவல் ஆணையர் ரவி விளக்கம்
28 May 2022சென்னை : சென்னை பொழிச்சலூரில் ஐ.டி.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 4- வது இடம் பிடித்தது இலங்கை
28 May 2022வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.
-
நீட் தேர்வு விவகாரம்: அண்ணாமலை கருத்து
28 May 2022நீட் தேர்வு தொடர்பான தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் உர இருப்பு குறித்த ஆய்வு கூட்டம் : உழவர் நலத்துறை செயலாளர் தலைமையில் நடந்தது
28 May 2022சென்னை : சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில் உர இருப்பு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி தலைமைய
-
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்துக்கு காரணமான மின்சார ரயில் டிரைவர் பணியிடை நீக்கம்..!
28 May 2022சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி: மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் : சிலை திறப்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
28 May 2022சென்னை : மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.