முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொகுசு கார் வாங்கிய விவகாரம்: நடிகர் விஜய் குறித்த தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில் நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதியின் எதிர்மறை கருத்துகளை நீக்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். இருப்பினும், உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து