முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மவுன அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் வருகை பதிவேட்டிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

இதற்கிடையே, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து