முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 96-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 637ஆக இருந்தது.

தங்கம் விலை சில வாரங்களாக தொடர்ந்து குறைந்ததால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 840-க்கும் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 605-க்கும் விற்றது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று  காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 96-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 637ஆக இருந்தது. 

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.68 ஆயிரத்து 500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனையானது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நம்பவர் 1-ம் தேதி ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 944-க்கு விற்பனையானது. அதன்பின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியே வந்த நிலையில் நேற்று பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து