முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொத்த பாதிப்பு 4 கோடியை தாண்டியது: இந்தியாவில் மீண்டும் உயர்ந்த தினசரி கொரோனா தொற்று

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 99 ஆயிரத்து 73 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 73 லட்சத்து 70 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 665 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக  இம்மாதம் 21-ம் தேதி 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் 59 லட்சத்து 50 ஆயிரத்து 731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 163.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 4 கோடியே 85 ஆயிரத்து 116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம் வரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 202 ஆக இருந்த நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 4 கோடியை கடந்தது.

இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 127 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். அதில் 70 சதவீதம் இறப்புகள் இணை நோய்களால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு  ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 237 இறப்புகள் மராட்டிய மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, கேரளாவில் 52 ஆயிரத்து 141 இறப்புகள் பதிவாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து